Saturday, November 3, 2012

கியூரியாசிட்டி

கியூரியாசிட்டி  03.11.2012
வேற்றுக்கிரகங்கள் தொடர்பான மனிதனின் ஆராய்ச்சிகள் , மும்முரமாக இடம்பெறும் இக்காலப்பகுதியில், அதனுடன் கூடி தேடல்களும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் உலக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு பட்ட முன்னெடுப்புக்கள் மூலம் வேற்றுக்கிரகங்கள் தொட்பான தங்களது ஆராய்ச்சிகளை பல பரிமாணங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த ஆராய்சச்pயின் விளைவு ப+மியில் வாழும் மனிதனை,   வேற்றுக்கிரகங்களில் வாழவேண்டுமென்ற ஆசைக்கு கொண்டு சென்றது. அதற்கிணங்க மனிதனால் சுவாசிக்க கூடிய வகையிலும் அவனுக்கு தேவையான வாழ்வாதர உறுப்புக்கள் கிடைக்கக்கூடிய வகையிலும்  அமைந்துள்ள கோள்களை தேடி விஞ்ஞானம் விரைந்துள்ளது.  அதன் பயனாக ப+மிக்கு, மிக அருகிலுள்ள  மற்றுமொரு கோளான செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கேற்ற அத்தனை அம்சங்களும் உள்ளதாக அண்மைய ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் செவ்வாயில் வாழவேண்டுமென்ற எண்ணம்,  மனிதனை உச்சநிலைக்கு கொண்டு சென்றது.  இந்நிலையில் செவ்வாயில் மனிதன் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்பதை ஆராயவும், அங்குள்ள பௌதீக நிலைப்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் நாசா நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட செய்மதி, க்ய+ரியாசிட்டி ஆகும். இதுவரை மனிதானல் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில், க்ய+ரியாசிட்டி, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளையும், கெமராக்களையும் சுமந்து சென்றுள்ளது. கடந்த வருடம் , நவம்பர் மாதம் 26 ம் திகதி க்ய+ரியாசிட்டி ரோவர் விண்கலம்,  விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 7 மாத பயணத்திற்கு பின்னர், கடந்த ஜீன் மாதம் 6 ம் திகதி செவ்வாய்க்கிரகத்திற் தரையிறங்கி , தனது ஆய்வுப்பணியினை ஆரம்பித்தது. இந்நிலையில் ஆய்வு செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை பல வித்தியாசமான கோணங்களில் செவ்வாய்கிரகத்தின் புகைப்படங்கள் க்ய+ரியாசிட்டியினால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும்  செவ்வாயின் தரையை தனது கூர்மையான் ஆயுதங்களால் தோன்டியெத்தும், பாறைகளை பிளந்தும், அது தொடர்பாக தகவல்களையும், புகைப்படங்களையும் க்ய+ரியாசிட்டி, ப+மிக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்நிலையில் க்ய+ரியாசிட்டி அனுப்பிவைத்துள்ள செவ்வாயின் மண்மாதிரிகள் , ப+மியின் ஜப்பான் நாட்டின் ஹவாய் தீவின் மண்மாதிரிகளை ஒத்ததாக உள்ளதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதன் காரணமாக அங்கு மனித இனமோ, அல்லது உயிரினங்களோ வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் ,  சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனிடையே செவ்வாய்ககிரகத்தில் கணிமவளங்கள் காணப்படுவதால் குறித்த கனிய  வளங்கள் மீதான பார்வையும் மனிதனுக்கு அதிகரித்துள்ளது. இதேவேளை க்ய+ரியாசிட்டி வெளியிட்ட செவ்வாய்க்கிரகம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கறுப்பு  நிற பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப்பொருள் காணப்பட்டது.  குறித்த மர்மப்பொருளானது, செவ்வாய்ககிரக வாசிகள்,  மனிதர்களை வேவு பார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட வேவு கப்பலாக இருக்கலாமெனவும் , சிலவேளை ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும தட்டுக்கலாக இருக்கலாமெனவும், விஞ்ஞானிகள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. எனினும் சிலர் , குறித்த கறுப்பு நிற மர்மப்பொருளானது, க்ய+ரியாசிட்டியின் புகைப்பட கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினால் ஏற்பட்ட கருந்துளையென குறிப்பிடுகின்றனர்.  எவ்வாறெனினும் செவ்வாயின் மண்மாதிரியை ஆய்வுசெய்யும்போது,  அங்கு ஹைட்ரிஜன் மற்றும் மக்னீசியத்தின் செறிவு அதிகமாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாம் வாழும் ப+மியிலிருந்து 57 கோடி தொலைவிலுள்ள செவ்வாய் கிரகமானது, சூரியனிலிருந்து ப+மியை விட தொலைவில் உள்ளதன் காரணமாக சூரிய வெப்ப மிதமான அளவு அங்கு காணப்படுமென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள குழிகள் மற்றும் மேட்டு நிலங்கள் என்பன அங்கு, ப+மியில் நடைபெற்றதை போல், மிகப்பெரிய யுத்தங்கள் நடைபெற்றமைக்கான சான்றாக இருக்கலாமென கருதப்படுகிறத. எவ்வாறெனினும் செவ்வாயில் மனிதன் வாழக்கூடியதற்கு ஏற்ற சூழல் காணப்படுவதால், க்ய+ரியாசிட்டியின் மும்முரமான தேடல் மற்றும் நகர்வுகளால், அதனை உறுதிப்படுத்தக்கூடிய செவ்வாய்க்கிரகம் தொடர்பான பல விடயங்கள் ப+மிக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய ஆராய்ச்சிகளில் மாத்திரமே நாசா விஞ்ஞானிகள் ,இறங்கியிருக்கும் நிலையில் அதற்கு ஒரு படி மேல் சென்று ஹோலண்ட் விஞ்ஞானிகள் இப்போதிலிருந்தே செவ்வாயில் குடியிருப்புக்களை அமைப்பதற்கான திட்டங்களை தீ;ட்டி வருகின்றனர்.  அதறகமைய எதிர்வரும் 2023 ம் ஆண்டளவில் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை குடியிருப்பதற்காக அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து பலர் குழுக்களாக செவ்வாய்க்கு அனுப்பபட்டு,  அங்கு குடியிருப்பதற்கான திட்டவரைபுகளை அமைப்பதில் ஹோலண்ட் விஞ்ஞானிகள் தீவிரமாகவுள்ளனர்.  இந்நிலையில் உலகில் ,முதன்முறையாக தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்பட்ட முதலாவது செயற்கைகோள் ஸ்புட்னிக் 1 ஆகும், சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விண்வெளிக்கு  செயற்கை கோள்களை அனுப்பும்  நடவடிக்கை இன்று செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா என ஆராய்ந்து வரும் க்ய+ரியாசிட்டி வரை பரிமாணித்துள்ளது.  மேலும்  கடந்த 1977 ம் ஆண்டு, அண்டவெளியினையும், உலகிலுள்ள ஏனைய சூரிய மண்டலங்களையும் ஆராயும் பொருட்டு அனுப்பப்பட்ட வயேஜர் 1 மற்றும் வயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் ,சுமார் 33 வருடங்களுக்கு பின்னர், சூரியன்  உள்ள பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த வயேஜர் 1 மற்றும் வயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் , அண்டவெளியிலுள்ள 23 நிலவுகளை கண்டுபிடித்துள்ளதோடு, பல சூரிய குடும்பங்களையும் கண்டுபிடித்துள்ளது. மேலும் குறித்த விண்கலங்களானது தொடர்ந்தும் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டவாறு பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில்,  அவை மேலும் 2 லட்சத்து, 96 ஆயிரம் வருடங்களுக்கு சேதமடையாமல் பயணிக்குமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படி குறித்த விண்கலம் பயணிக்கும் பட்சத்தில் அண்டவெளியில் மிகப்பிரகாசமான நட்சத்திரமான சிரியசை அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே எல்லையற்ற அண்டவெளியில் மனிதன் தனது ,செய்மதிகள் மூலமும், விண்கலங்கள் மூலமும் மடிவற்ற ஆராய்ச்சிகளை தொடரும் இக்காலத்தில், க்ய+ரியாசிட்டி மனிதனை செவ்வாயை நோக்கி பயணிக்க வைக்கும் யுகத்திற்கு அழைத்துசெல்லும் படிமுறைக்கு வழிவகுக்கிறது. மனிதனி;ன தொடரும் ஆராய்ச்சிகளால் செவ்வாயில் மாத்திரமின்றி , உலகிலுள்ள இன்னும் எத்தனை கோள்களில் அவன் எதிர்காலத்தில் வாழ முற்படுவான் என்பது இயற்கைக்கும்  , அண்டவெளிக்கும் மனிதன் சவாலாகவே அமையும். ..................................................................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi