Sunday, September 30, 2012

ஓசோன்


ஓசோன் படலம்…… 16.09.2012

சூரிய ஒளிப்பிழம்பிலிருந்து வெளியேறும் புறவ+தா கதிர்தாக்கத்திலிருந்து உயிர்களைகாத்து ப+மியில் வாழும் உயிரினங்களுக்கு பாதுகாப்பு படையாக காணப்படுவது ஓசோன் படலமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 20 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையுள்ள அடுக்கு வாயுக்களை கொண்ட வலயமே ஒசோன் படலமாகும். 1840 ம் ஆண்டில் ஜேர்மன் அறிஞர் ப்ரடரிக் ஸ்கோன் பெய்ன் ஓசோனை கண்டறிந்தார். ஓசோனின் அளவையும் பரப்பையும் செயற்கைகோள் மூலமாக துல்லியமாக அறியமுடியும். இவ்வாறு ப+மியினை ஆபத்தான கதிர்வீச்சுக்களிலிருந்து காத்துவரும் ஓசோனின் அளவு படிப்படியாக குறைந்து வருதை அறிஞர்கள் கண்டறிந்தனர். அதனை அடுத்து ஓசோனை பாதுகாப்பதற்கு கடந்த 1987 ம் ஆண்டு செப்டமபர் மாதம் 16 ம் திகதி கனடாவிலுள்ள மேன்றில் நகரில் மேன்றின் ஒப்பந்தம் எனும்  உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. குறித்த உடன்படிக்கையின் பின்னர் ஓசோனின் துளை அளவு குறைந்திருந்தது. இந்நிலையில் இதேநிலை நீடிக்குமாயின் 2050 ம் ஆண்டுக்குள் ஓசோன் துளை மறைந்து விடுமென அறிவியலாளர்கள் நம்புகின்றனர்;. அதற்கமைய கடந்த 1987 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ம் திகதி ஏற்படுத்திக் கொண்ட மேன்றில் ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 16 ம் திகதி சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ழு3 எனும் இரசாயன குறியீட்டால் அளையாளப்படுத்தப்படும் ஓசோனின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.  ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களை முக்கிய காரணமாகும். குறிப்பாக O3 என குறிக்கப்படும். குளோரோ புளோரோ காபனின் பாவனையில் ஓசோன் படலம் பாதிப்படைவதற்கு அதிக காரணமாக விளங்குகின்றது. குளிரூட்டியில் பயன்படுத்தப்படும். குளோரோபுளோரோ காபன் ஓசோனை அதிகளவு பாதிப்புக்குள்ளாக்குகிறது. மேலும்  ஏ சி , நெய்ல்ஸ் பொலிஸ், லிப்டிக்ஸ், தீயணைப்பு கருவி, ஸ்ப்றெஸ் போன்றவற்றின் குறித்த குளோரோ புளோரோ காபன் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. குறித்த குளோரோ புளோரோ காபன் ஓசோனுடன் தாக்கமடைந்து குளோரினை தோற்றுவித்து குறித்த குளோரின் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு குளோரோபுளோரோ காபன் மூலக்கூறு 1000 ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்க கூடியது. அதனால் குளோரோபுளோரோ காபனை ஓசோன் கொல்லி எனவும் சொல்லப்படுகிறது. இதேவேளை ஓசோன் படலம் குறைவடைவதனால் சூரிய கதிர்கள் நேரடியாக ப+மியை தாக்கும். அதனால் ப+மியின் வெப்பம் அதிகரிக்கும்.  துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் உயரும், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் மேலும் ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே ப+மியை அடையும் புறவ+தா கதிர்கள் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். குறித்த கதிர்வீச்சு கண்ணோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தல், தோல்புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் குறித்த புறவ+த கதிர்கள் கடல் உணவுச்சங்கிலியின் முதல் இடத்திலுள்ள மிதவை உயிரினங்களை எழிதில் அழிக்கும். இவை அழிவதால் மற்றைய கடல் உயிர்கள் அழிவடையும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் கடந்த 2000 ம் ஆண்டு ஓசோன் படையின் துளையின் அளவு 28.3  மில்லியன் சதுரகிலோ மீற்றர் பரப்பளவாக காணப்பட்டது. இது அவுஸ்திரேலிய கண்டம் போல் 3 மடங்கான பரப்பளவை கொண்டது. இந்நிலையில் ஒசோன் படை தொடர்பான உலக  விழிப்புணர்வு காரணமாக கடந்த 2002 ம் ஆண்டு குறித்த துளையின் பரப்பளவு 15 மில்லியன்  சதுரகிலோ மீற்றராக குறைவடைந்தது. தொடர்ந்து ஒசோன் படையை பாதுகாப்பதற்கு உலக உயிரினங்களாகிய நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.  உயிரினங்களை வாழ வைப்பதற்கு வளிமண்டலத்திலிருந்து செயற்படும் ஓசோன் படையின் அடர்த்தியை குறையவிடாமல் காப்பற்ற வேண்டியது மனித வர்க்கத்தினர் அனைவருக்கும் உரிய மிகப்பெரிய பொறுப்பாகும். அதற்கமைய ஒசோனை சிதைக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் ப+மியில் நாம் மேற்கொள்ள மாட்டோமென அனைவரும் உறுதி ப+ணுவோமாக….........................................................................................................பிரசன்னா..

No comments:

Post a Comment

hi