Monday, October 8, 2012

ப்ரமிட்


ப்ரமிட்…
லக அதிசயங்களில் ஒன்றான ப்ரமிட் இன்றும் உலகை ப்ரமிக்கவைக்கும் அற்புத படைப்பாகும். தற்போதைய நவீன தொழிநுட்ப யுகத்தால் கூட சிந்திக்க முடியாத கட்டிட அமைப்பை கொண்டதாக ப்ரமிட் காணப்படுகிறது. நிலவிலிருந்து பார்த்தால் கூட தெரியக்கூடியதாக அமைந்துள்ள ப்ரமிட் ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மை மிக்க வரலாற்றை கொண்டது. பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட போதும் அணுவளவேனும் பாதிப்படையாத ப்ரமிட் உலகில் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமே காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களை உருவாக்கியது யார்??? ஏன் உருவாக்கப்பட்டது??? முக்கோண வடிவில் அமைக்கப்பட்ட கட்டிட அமைப்பின் ரகசியம் என்ன??? இந்த கேள்விகளுக்கு இன்றுவரை விஞ்ஞானத்தாலோ தொழிநுட்பத்தாலோ பதில் கண்டுபிடிப்படவில்லை. எகிப்தின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள ப்ரமிட் இறந்த மன்னர்களின் கல்லறைகளே என கருத்து  நிலவுகிறது. மம்மி என்று அழைக்கப்படும் மனிதவுடல் ப்ரமிட்டுக்குள் இருக்க கூடுமென ஐதீகம் நிலவுகிறது. பாரிய கற்களை கொண்டு நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ள ப்ரமிட்டுகளை எவ்வித தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கினார்கள் என்பது இன்றும் விஞ்ஞானிகளின் தூக்கத்தை கெடுக்கும் வினாவாகவே காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான கற்கள் எங்கிருந்து பெறப்பட்டதென்பது தொடரும் மர்மமாகும். ப்ரமிட்டுக்களின் உயரம் வரலாற்று ஆய்வாளர்களை வாய்பிழந்து யோசிக்க வைத்துள்ளது. வேற்றுக்கிரக வாசிகள் ப்ரமிட்டை கட்டியிருக்கலாமென நம்பப்படுகிறது. செவ்வாய் கிரகத்திலுள்ள சைடோனிக் என குறிப்பிடப்படும் பகுதியில் எகிப்திலுள்ள ப்ரமிட்டுக்களை போன்ற ப்ரமிட் அமைப்புக்கள் காணப்படுகின்றன. இதனால் செவ்வாய் கிரக ப்ரமிட்டுக்கும் எகிப்து ப்ரமிட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாமென கருதப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானிகள் இதை உண்மையாக இருக்கலாமென கருதுகின்றனர். பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் தாம் இறந்ததன் பின்னர் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருந்தார்கள். இதனால் எகிப்திய மன்னர்கள் தமது மறுவாழ்;க்கைக்கு தேவையான அரண்மனைகளாகவே ப்ரமிட்டுக்களை அமைத்ததாக ஜதீகம் காணப்படுகிறது. ப்ரமிட்டுக்களில் மன்னரின் சடலத்தோடு அவர் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய விலையுயர்ந்த ஆபரணங்களும் பொருட்களும், உணவுத் தானியங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மன்னர்கள் மாத்திரமின்றி மகாராணிகள் மதகுருமார்கள் உட்பட பலசாரார் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தமக்கான ப்ரமிட்டுக்களை உருவாக்கியதாக பண்டைய வரலாறு கூறுகிறது. விஞ்ஞானிகள் அதிசய ப்ரமிட்டின் வியப்புகளை கண்டறிய எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பண்டைய காலம் தொட்டு ப்ரமிட்டின் இரகசியம் பரம ரகசியமாகவே காணப்படுகிறது. விஞ்ஞானிகள் மாத்திரமன்றி மன்னர்களும் ப்ரமிட்டின் மர்மத்தை கண்டறிய களத்தில் குதித்து செயற்பட்டனர். உலகையே ப்ரமிக்க வைத்த மாவீரன் நெப்போலியனை கூட ப்ரமிட்டுக்கள் ப்ரமிக்க வைத்துள்ளன. ப்ரமிட்டுக்களின் ரகசியத்தை கண்டறிய ஆர்வம் கொண்ட மாவீரன் நெப்போலியன் தனியாளாக ஓர் இரவு ப்ரமிட்டில் தங்கியுள்ளார். மறுநாள் காலை வெளிவந்த அவர் ப்ரமிப்பின் உச்சத்தில் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ப்ரமிட்டின் பல ரகசியங்களை அனுபவரீதியாக கண்டறிந்த மாவீரன் நெப்போலியன் அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. “ நான் சொல்வதை யாரும் நம்பமாட்டர்கள்” என்ற கருத்தை மட்டும் நெப்போலியன் வெளியிட்டிருந்தார். நவீன தொழிநுட்ப யுகத்தில் அதிநவீன கெமராக்கள், இலத்திரனியல் உபகரணங்கள், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பொருட்கள் என அனைத்தும் கைக்கெட்டிய தூரத்தில் காணப்படும் காலத்தில் ப்ரமிட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நீடிப்பது விஞ்ஞான உலகத்திற்கு தோல்வியே!!! ப்ரமிட்டின் ப்ரமிக்க வைக்கும் மர்மங்கள் தொடர்ந்தும் வியப்ப+ட்டும் நிலையில் அதன் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளமை விசேட அம்சமாகும். .................................பிரசன்னா











No comments:

Post a Comment

hi